கர்நாடகாவில் அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீசாவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது. இப்படம் நாளை (31–ந்தேதி) உலகம் முழுவதும் வெளியாகிறது.
தமிழகத்தில் 500–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்படுகின்றன.
அண்டை மாநிலமான கேரளா, ஆந்திராவிலும் வெளியாகிறது. கர்நாடகத்திலும் நாளை
ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டன. ஆனால் அங்குள்ள தியேட்டர் அதிபர்கள்
கன்னடர்கள் தாக்குதல் நடத்தலாம் என அஞ்சி படத்தை திரையிடுவதை
நிறுத்தியுள்ளனர்.
கன்னடர்கள் நவம்பர் 1–ந்தேதி ‘ராஜ் யோத் சவா’ என்ற நிகழ்ச்சியை மாநிலம்
முழுவதும் கொண்டாடுகிறார்கள். ‘ராஜ் யோத் சவா’ என்பது கர்நாடக மாநிலம்
உருவான தினம் ஆகும். இந்த நாளை கன்னடர்கள் ஒரு பண்டிகை போல்
கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் கர்நாடகாவில் உள்ள தமிழர் பகுதிகளில்
பதட்டமான நிலைமை காணப்படும்.
காவிரி பிரச்சினை காரணமாக ஏதேனும் மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் அங்கு
நிலவும். இதனால் ஏராளமான போலீசார் குவிக்கப்படுவது உண்டு. எனவேதான்
நாளையும் நாளை மறுநாளும் (1–ந்தேதி) ஆரம்பம் படத்தை ரிலீஸ் செய்வதை
நிறுத்தியுள்ளனர். 2–ந்தேதி படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூர், மாண்டியா மாவட்டங்களில் இரண்டு வாரம் கழித்தே படம் ரிலீசாகும் என
கூறப்படுகிறது.
Wednesday, October 30, 2013
கர்நாடகாவில் அஜீத்தின் ஆரம்பம் படம் ரிலீசாவதில் சிக்கல்...
Subscribe to:
Post Comments (Atom)






0 comments:
Post a Comment