பாம்மை வைத்து வித்தை காட்டும் பல விந்தை மனிதர்கள், பற்றி நாம் ஏற்கனவே பல
தடவைகள் பலரை அறிமுகப்படுத்தியுள்ளோம். இன்று நீங்கள் பார்க்கப்போகும்
விசித்திர மனிதன் இலங்கையை சேர்ந்த ஒருவர். சுமார் 2 அடி நீளமாக நாகபாம்பை
தனது வாயினூடாக தொண்டைக்குள் செலுத்தி மீண்டும் வெளியில் எடுத்து வித்தை
காட்டுகிறார். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:-
இலங்கையை சேர்ந்து 50 வயதான ஒரு நபரே இச்சாதனை முயற்சியில் ;டுபட்டுள்ளார்.
இரண்டு நாகபாம்புகளை முழுமையா விழுங்கி உலகசாதனை நிலைநாட்டுவதற்காகவே இந்த
முயற்சி என அவர் மேலும் தெரிவித்தார். எனினும் நாகங்களை வாயினுள்
செலுத்துவது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். இந்த முயற்சியில் முதல்
படியாக இவர் நிகழ்த்தும் சாதனையை நீங்கள் வீடியோவில் காணலாம்.
0 comments:
Post a Comment