Friday, October 25, 2013

கடல் கன்னி உருவில் பிறந்த குழந்தைகள்!!!

                    http://www.puthiyaulakam.com/wp-content/uploads/2013/10/Bildschirmfoto-2013-10-16-um-21.35.37.png
இடுப்பின் மேற்பகுதி மனித உருவத்தினையும்இ கீழ்ப்பகுதி மீனின் வாலை ஒத்த உருவத்தினையும் கொண்ட வடிவத்தினை கடற்கன்னி என்று அறிந்திருப்பீர்கள். இது பல சமயங்களில் கட்டுக்கதை என்று சொல்லப்பட்ட போதிலும் சில சமயங்களில் உண்மை என்று நிரூபிக்கப்படும் வகையில் ஆதாரங்கள் தோன்றி மறைவதுண்டு. இதைப்போன்றுதான் அண்மையில் வெளியான ஒரு திகிலூட்டும் வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளமையும் நீங்கள் அறிந்த ஒன்று. தூரத்தில் இருந்து எடுக்கப்பட்ட அந்த வீடியோவில் கடற்கரையின் பாறை ஒன்றில் கடல்கன்னி ஒன்று இளைப்பாறிக்கொண்டிருந்தது.
யாரோ தம்மை வீடியோ எடுப்பதை அறிந்து கொண்ட அந்த கடல் கன்னி திடீரென பாறையில் இருந்து நழுவி கடலுக்குள் குதித்த மெய்சிலிர்க்கும் காட்சிகளை முன்னர் நாம் வெளியிட்டிருந்தோம். சரி இன்று நாம் உங்களுக்கு தரப்போகும் தகவல் உலகில் நிஐமாகவே கடல் கன்னியின் சாயலில் குழந்தைகள் பிறந்துள்ளமை பற்றியே. இவ்வாறு பிறந்த இரு குழந்தைகள் பற்றிய பதிவையே இன்று உங்களுக்கு தரப்போகிறோம்.
                   
படம் 1இல் நீங்கள் பார்க்கும் குழந்தை பெரு நாட்டில் பிறந்துள்ளது. பிறக்கும் போது கிட்னி பிரைச்சினையுடன் பிறந்த இக்குழந்தைக்கு பலரும் வியக்கத்தக்க வகையில் கால்கள் ஒட்டி மீனின் வால் போன்று காணப்பட்டது. இது “குட்டி தேவதை” அல்லது கடல் கன்னி என பலராலும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இக்குழந்i தொடர்பான உண்மையான புகைப்படத்தை நீங்கள் இச்செய்தியில் காணலாம்.
இதே புகைப்படத்தை வைத்து குறித்த குழந்தையின் ஒட்டிய கால்களை மறைத்து மீனின் வால்களை பொருத்தி பொய்யான செய்திகளை சில இணையத்தளங்கள் வெளியிட்டுள்ளதை அவதானித்தோம். எனவேதான் இது தொடர்பான புகைப்படங்கள் உள்ளடங்களாக முழுவிபரங்களையும்  உங்கள் முன் ஒப்புவிக்கின்றது.

0 comments:

Post a Comment